1 May 2020

இங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி!

கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர் பலியாகி இருந்தனர் என சுகாதார மற்றும் சமூக நல துறை கூறியிருந்தது. இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்பொழுது, கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 674 பேர் பலியாகி உள்ளனர். இது முந்தைய நாள் எண்ணிக்கையை விட சற்று குறைவாகும். இதனால் பலி எண்ணிக்கை 26 ஆயிரத்து 711 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று 6 ஆயிரத்து 32 பேருக்கு...
Share:

26 Jun 2016

என்ன நடக்கும் என தெரியாமல் வாக்களித்த பிரிட்டன் மக்கள்! அம்பலப்படுத்திய கூகுள்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்து சென்றால் என்னவாகும் என்று தெரியாமலேயே அப்படி செல்வதற்கு ஆதரவாக மக்களில் பெரும்பாலானோர் ஓட்டு போட்டுள்ளனர். கூகுள் டிரெண்ட் மூலம் இந்த தகவல் அம்பலமாகியுள்ளது. கூகுள் டிரெண்டில் "ஐரோப்பிய யூனியனை விட்டு நாம் வெளியேறினால் என்னவாகும்" என்ற கேள்வியை வாக்கெடுப்பு நடந்த 2 மணி நேரத்திற்கு பிறகு அதிக மக்கள் கூகுளில் கேட்டுள்ளனர். இது 250 மடங்கு அதிகம் என்று கூகுள் கூறியுள்ளது. அதாவது, வாக்கெடுப்பில் ஓட்டு...
Share:

பிரித்தானியா விலகுவதற்கான வழிமுறைகள் குறித்து ஒன்றியம் விளக்கம்

பிரித்தானியாவில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட குடியொப்ப வாக்கெடுப்பு தொடர்பான கருத்துக்கணிப்பின் முடிவுகளின் படி, ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலக தீர்மானித்துள்ள நிலையில் முறைப்படி ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை தொடர்பிலான வழிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் தெளிவுபடுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவி விலகவுள்ளதாகவும், அதன் பின்னர் அவரது பொறுப்புக்களை கையேற்பவர் பிரித்தானியா விலகுவது...
Share:

பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் விடுக்கும் அவசர செய்தி !

இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.பேஸ்புக்,  போட்டோக்களாலே அதிக வாசகர்களை இணைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் உள்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு...
Share:

23 Jun 2016

எம் தலையில் கொத்துக்குண்டு வீசியவரிலும் கொடியவர் நமரே!

வன்னியில் நடந்த போரில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டன என்று பிரித்தானிய கார்டியன் பத்திரிகை உறுதி செய்து செய்திவெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வன்னி மண்ணில் வீசிய நாசகாரம் சாதாரணமானதன்று. இந்த நாட்டின் பிரஜைகளான தமிழ் மக்களைக் காப்பாற்றவேண்டிய இலங்கை அரசாங்கம் தமிழர்களின் தலையில் கொத்துக் குண்டுகளைக் கொட்டிக் கொலைப் பாவம் செய்தது எனில், வன்னியில் நடந்த போரின்தாக்கம் எப்படியாக இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லி...
Share:

ஈழத்தமிழருக்கு குடியுரிமை வழங்க இந்தியா பின்னடிப்பது ஏன்?

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் பலர் தமது வாழ்வு சிறக்கும் என்ற வாக்குறுதிகளின் மத்தியில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணிக்கின்றனர்.இவ்வாறு அவுஸ்திரேலியா நோக்கி ஜூன் 2 ஆம் நாள் புறப்பட்ட ஈழத்தமிழர்கள் 28 பேர் தமிழ்நாடு கரையோர காவற்துறையால் வழிமறிக்கப்பட்டனர். இவர்கள் தமக்காகக் காத்திருந்த படகை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே வழிமறிக்கப்பட்டனர். இவர்கள் தமது படகில் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணமாகியிருந்தால் செல்லும் வழியில்...
Share:

22 Jun 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: தெற்காசிய வாக்குகள் எந்த பக்கம்?

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய ராஜ்ஜியம் தொடர்ந்து நீடித்திருப்பதா அல்லது அதிலிருந்து விலகுவதா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக பிரிட்டனில் நாளை வியாழக்கிழமை (23-06-2016) நடக்கவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கான இறுதிப் பிரச்சாரம் இன்றோடு (22-06-2016) நிறைவடைகிறது. பிரிட்டனில் சுமார் 14.5 லட்சம் இந்திய வம்சாவளியினரும், 11.7 லட்சம் பாகிஸ்தானிய வம்சாவளியினரும் வாழ்கிறார்கள். ஐக்கிய ராஜ்ஜ்ஜியத்தின் இரண்டு பெரிய சிறுபான்மை சமூகங்களாக இவை கணிக்கப்படுகின்றன. பிரிட்டிஷ்...
Share: