22 May 2016

இலங்கைக்கு வந்த கப்பலில் யுத்த ஆயுதங்கள் ? அதிர்ச்சியில் இலங்கை?

இலங்கையில் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவிலிருந்து இரண்டு கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இந்நிலையில் இக்கப்பல்களில் நிவாரணங்களுக்கு பதிலாக ஆயுதங்கள் வந்திரங்கியுள்ளதாக அதிர்ச்சியான தகவல் ஒன்று கசிந்துள்ளது.
அதாவது இவ்வெள்ள அனர்த்தத்தினை தனக்கு சாதமாக்கிக் கொண்டுள்ள இந்தியா மறைமுகமாக கப்பல்களில் ஆயுதங்களை கொண்டவந்துள்ளதாக இரகசிய தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
சிறீலங்காவுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கப்பல்கள்!
இந்திய சீனாவிற்கு இடையிலான ஆயுதப்போரில் சீனாவை வெற்றிக்கொள்ள இலங்கையை தளமாகக்கொண்டு செயற்பட இந்தியா ஆரம்பித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அனுதாபத்தின்போது, இந்தியா எப்போதும் இலங்கை மக்களுக்கு உதவத் தயாராக இருப்பதோடு, அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என இந்திய பிரதமர் தெரிவித்திருக்கின்ற நிலையில் , அவரின் மேற்பார்வையின் கீழ் இவ்செயற்பாடு இடம்பெற்றுவருதாக தகவல் கசிந்துள்ளது.
அத்துடன் சிறீலங்கா அரசாங்கம் உதவுமாறு விடுத்த கோரிக்கையின் பேரிலேயே இந்த இரண்டு கப்பல்களிலும் நிவாரணப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் எதிர்கால வெளிநாட்டு ராஜதந்திர உத்தியாக இச்செயற்பாடு இடம்பெற்றுவருவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக பல செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வரும் வேளையில், இச்செயற்பாடும் அவற்றில் ஒன்றாக இருக்குமா என்பது தற்போது கேள்வியாகியுள்ளது.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி தனது ராஜதந்திர உறவுகளில் அதிகமாக சீனாவுடனே தனது உறவுகள பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆட்சியினை இழந்தாலும் சீனாவுடனான நட்புறவு தொடர்ந்து வருகின்றமை நாம் அறிந்ததே.
குறிப்பாக இந்திய-சீனப் போருக்கும் முக்கியக் காரணமாகக் கூறப்படுவது எல்லைப் பிரச்சனை. இந்திய-சீன எல்லை என்பது சுமார் 3448 கி.மீ. நீளம் கொண்டது. பொதுவாக, இந்த எல்லைப் பிரச்சனை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கூறப்படுகிறது. அவை…
(அ) மேற்குப் பகுதி: இது ஜம்மு-காஷ்மீருக்கும் ஸிங்ஜியாங்–இற்கும் இடைப்பட்ட பகுதி. சீனா இந்தியாவின் 43000 ச.கி.மீ பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறுகிறது. இதில் 5180 ச.கி.மீ. பாகீஸ்தானால் சீனாவிற்குக் கொடுக்கப்பட்டது
(ஆ) மத்தியப் பகுதி: இது ஹிமாசலம், உத்ராகாண்ட் ஆகிய மாநிலங்களும் திபெத்தும் இணையும் எல்லைப் பகுதி. இங்கு ஷிப்கி-லா, கௌரிக், புலம், தக்-லா, பராஹொரி, பிங்ரி-லா, லப்தால், சங்கா ஆகியப் பகுதிகளை இந்தியா-சீனா இரண்டும் சொந்தம் கொண்டாடின.
(இ) கிழக்குப் பகுதி: சீனா இந்தியாவின் அருணாசலப்பிரதேசத்தின் 90000 ச.கி.மீ. பகுதியை (முக்கியமாக தவாங், பும்-லா, அஸப், லோ-லா ஆகியவை; இதில் தவாங் பகுதி, சியாசின் போல இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது) தனதாகச் சொந்தம் கொண்டாடியது.
இவ்வாறு எல்லைப்பிரச்சினையில் பாகிஸ்தானை விட சீனாவின் மீதே அதிகரித்த மோதலை வளர்த்துக்கொண்டு வருகின்றது இந்தியா.
தீராத பிரச்சினையாக வலுவெடுத்துள்ள இப்பிரச்சினைக்கு தற்போது இலங்கையை தளமாக இந்தியா பயன்படுத்தும் விடயம் உண்மையென்றால் எதிர்காலத்தில் பாரிய பின் விளைவுகளை இலங்கை எதிர்நோக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
குறிப்பாக சீனா இலங்கையில் ஏற்கனவே மகிந்தவின் ஆட்சியில் பல முதலீடுகளையும், ஒப்பந்தங்களையும் மேற்க்கொண்டுள்ளது. தொடர்ந்து வந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் சீனாவுடனான உறவு தவிர்க்க முடியாமல் போனமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அமைவிடத்தை தீர்மானித்துள்ள மேற்குலக நாடுகள் இலங்கையை ஒரு போருக்கான பொருத்தமான தளமாக அடையாளமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் அமெரிக்காவும் அடங்கும்.
இந்நிலையில் நிவாரணம் என்ற போர்வையில் இரண்டு கப்பல்களும் ஆயுதங்களை கொண்டுவந்துள்ளமை உண்மையானால் இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியே.
காரணம் தற்போது ஆயுதங்கள் ரீதியிலும், பொருளாதாரம் ரீதியிலும் முன்னிலையில் உள்ள சீனாவிற்கு இலங்கையின் செயற்பாடு பாரிய அதிர்ப்பதியினை ஏற்படுத்தும்.
குறிப்பாக அமெரிக்காவே வியந்துப்போயுள்ள சீனாவின் வளர்ச்சியில் இலங்கை ஒரு விடயமே இல்லை.
ராஜதந்திர உறவுகளை பொருத்தமான முறையில் மேற்கொள்ளுவது கட்டாயமானதாகும்.
சுனாமியில் பல உயிர்களை இழந்தது இலங்கை.
வெள்ளப்பபெருக்கு , மண்சரிவு என பல உயிர்களை இழந்தது இலங்கை
யுத்தம் என்ற போர்வையில் பல உயிர்களை இழந்தது இலங்கை.
தற்போது ஆயுத கடத்தல் என்ற விடயம் மட்டும் உண்மை எனின் எதிர்காலத்தில் இலங்கையின் அமைவிடமே இல்லாமல் போகும் நிலை வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இவற்றில் முதலில் பாதிக்கப்படுவது வடக்கு பிரதேசமாகவே இருக்கும், ஈழத்தமிழர்களின் அழிவிலும் முன்னின்று செயற்பட்ட இந்தியாவிற்கு இலங்கை செய்யும் கைமாறாக இவ் ஆயுதம் இறக்கப்பட்ட விடயம் என சிலர் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆயுத பலத்தில் ராஜாவாக திகலும் சீனாவிற்கு இலங்கையை சுக்கு நூறாக்க ஒரு நிமிடம் போதும் இதுவே உண்மை……….இதற்கான ஆரம்பத்தை இலங்கையே ஏற்படுத்திக்கொடுக்கிறதா? இலங்கைக்கான அழிவுக்குழியை இலங்கையே வெட்டுகிறதா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது……..

Share: