22 Jun 2016

2050ல் லண்டனில் முஸ்லீம் தான் ஆட்சி செய்வார்கள்- பெரும் சர்சையை கிளப்பும் போட்டோ.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறவேண்டும் என்று கூறும் ஒரு பெரும் அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறித்த அமைப்பிற்க்கு 27 மில்லியன் பவுன்டுகள் இதுவரை நிதி உதவி கிடைத்துள்ளதால் பிரித்தானிய பிரதமர் அலுவலகமே ஆடிப்போயுள்ளது என்கிறார்கள். அதாவது அரசாங்கத்தால் கூட இவ்வளவு பெருந்தொகைப் பணத்தை திரட்ட முடியாது உள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய நாடுகளோடு இணைந்திருக்க வேண்டும் என்று பரப்புரை செய்ய அரசாங்கத்தால் கூட 27 மில்லியனை ஒதுக்க முடியாது. அந்த அளவுக்கு பல செல்வந்தர்கள், பிரித்தானியா வெளியேறவேண்டும் என்ற கொள்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள். இது இவ்வாறு இருக்க, பெரும் பண முதலையான பெண் ஒருவர் இருக்கிறார். அரபெல்லா ஆக் வயிட் என்னும் இப்பெண்மணி பெரும் செல்வந்தர் ஆவார். அவர் தனது ரிவீட்டரில் 2050ம் ஆண்டு பிரித்தானியா முழுவதும், முட்டாக்கு அணிந்த முஸ்லீம் பெண்கள் செல்வது போலவும். அங்கே ஒரே ஒரு ஆங்கிலப் பெண் , இருப்பது போலவும் ஒரு படத்தை வெளியிட்டு பெரும் சர்சையில் சிக்கிக்கொண்டுள்ளார். அப்படத்தில் உள்ள ஆங்கிலப் பெண்மணி பாட்டியே ஏன் இதனை நீங்கள் தடுக்கவில்லை என்று கேட்பது போல வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிரித்தானிய மகாராணியை(பாட்டி என்று அழைப்பது) குறிப்பது போல உள்ளது. நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகவேண்டும் என்று அன்றே கூறி இருந்தால் தற்போது இன் நாட்டை முஸ்லீம்கள் ஆளவேண்டி வந்திருக்காதே என்ற பொருள்பட இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
Share: