22 May 2016

தென்னிலங்கையில் வெள்ளத்தால் சிங்களம் அழிவு.. தமிழர்கள் உதவி ?

இலங்கையை இயற்க்கை காவு கொண்ட மாதம் மே மாதம், சிங்களம் தமிழனை காவு கொண்ட மாதம் மே மாதம்..
சிரிக்க வேண்டும் சிங்கள மக்களை பார்த்து என்று சொல்லவில்லை.. அப்புறம் எங்களுக்கு அவங்களுக்கும் என்ன வித்தியாசம்.. சிந்தியுங்கள்.. எம்மை சிங்களம் அடித்து கொன்று குவித்த போது சிங்களம் கொண்டாடியது.. " மண்சரிவில் சிக்கிய வீட்டாருக்காக உணவின்றி காத்திருந்த நாய் " என்ற செய்தி Lankasri ஊடகத்தில், வெசாக் கொண்டாடாமல் இருப்பது கவலை அழிக்கிறது.... உலகமே எங்களுக்கு உதவுங்கள்.. தண்ணீரில் மிதக்கும் தென்இலங்கை உதவ யார் ? காணவில்லை எம்முறவுகளை.. இப்படியாக பல செய்திகள்..
இன்று ஒரு நாய்க்காக பரிதாபப்படுவோர் 2009 எமக்காக பரிதாபப்பட்டது யார் ? 2009 இதே மாசம் இதே திகதிகளில் எம்மினம் சாகும் போது நாங்கள் எவ்வோளவு துடித்திருப்போம்.. உறவுகள் எவ்வளவு துடித்திருக்கும்.. ஒரு நாய்க்கு இப்படி பரிதாபம் காட்டுவோர்.. அன்று 2009 இல் எத்தனை நாய், கால்நடைகள், எத்தனை உயிர்கள் கொத்து கொத்தாக உயிரோடு கொலை செய்யும் போது எங்கே அந்த ஊடகங்கள் ?
இன்று நொடிக்கு ஒருமுறை இலங்கையில் வெள்ளம், மண்சரிவு மக்கள் அவலம் என்று ஊடகங்களில் செய்தி.. தமிழ் ஊடகங்கள் தான் முன்னிலையில்.. தமிழ் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டது அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை.. பாதிப்பு குறைவு என்று ஒதுக்கி விட்டார்களோ ? 2009 இல் சிங்கள காடையர்களால் எமது இனம் கொத்து கொத்தாக கொலை செய்யப்படும் பொது யாரும் கேக்கவில்லை.. உலக ஊடகமே வாயை பொத்தி மௌனம் காத்தது.. ஆனால் இப்பொழுது ஒரு நாய் வீட்டாரை காணாது காத்திருந்த செய்தியை போடுகிறார்கள் தமிழ் இணையத்தளத்தினர்.. ( மண்சரிவில் சிக்கிய வீட்டாருக்காக உணவின்றி காத்திருந்த நாய் - Lankasri ஊடகம் ) மே 18 இல் எத்தனை உயிர்களை இழந்தோம் அப்பொழுது யாருக்கும் அந்த வலி தெரியவில்லை..
தமிழர் பகுதிகளும் பாதிக்கபட்டுள்ளது கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகள் ஆனால் அதை கவனிப்பார் யாரும் இல்லை.. தமிழர் பகுதிகளில் பாதிக்கபட்ட மக்களை கவனிக்க வேண்டிய கடமை ஒவொரு தமிழனுக்கும் மற்றும் தமிழ் அரசியல் வாதிகளுக்கும் உண்டு.. நாமும் எங்கள் அறக்கட்டளை மூலம் எங்களால் ஆனா உதவியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு செய்யவிருக்கிறோம்..
இந்தியன் 2 கப்பல் அனுப்புரானாம் நிவாரண பொருட்களோட.. எங்கட தமிழ் இணயதளங்கள் எல்லாம் சேர்ந்து சிங்கள மக்களுக்கு அதை பிரிச்சு கொடுங்க.. கம்மா நாட்டிகளா..
எமினத்தை அழித்த அதே நாளில் மே 18 இல் இயற்க்கை சீற்றம் கொண்டுள்ளது பார்த்தீர்களா ?? புலிகளை அழித்துவிட்டோம் என்று 2009 இல் சிங்கள மக்கள் எலோரும் வீதி வீதியாக கொண்டாடினார்கள்.. இப்பொழுது என்ன ஆகிவிட்டது என்று பார்த்தீர்களா ? 100 சிங்களவன் செத்ததுக்கு இந்த ஆர்ப்பாட்டம் என்றால் அன்று 2009 இலட்ச கணக்கில் எம் தமிழ் மக்கள் கொலபட்ட போது..
இவ்வாறு பேசுதல் தவறு தான் என்னை மன்னித்து கொள்ளுங்கள்.. தேசியத்தலைவர் கூறியது சிங்கள மக்கள் எங்கள் எதிரி இல்லை என்று தான் உண்மை தான்.. ஆனால் எம்மினத்தை கொன்று குவித்த போது சிங்களமே கொண்டாடியது..
இப்பொழுது நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை உதவிகளையும் செய்ய வேண்டும்.. எம்மினம் வெள்ளத்தால் மட்டும் பாதிக்கப்படவில்லை போராலும் பாதிக்கப்பட மக்கள், போராளிகள் பலர் உள்ளனர் அவர்களை நாமே பாதுகாக்க வேண்டும்.. காக்க வேண்டும்..

News From Facebook


Share: